திருச்சி சர்வதேச விமான நிலையத்திலிருந்து பல்வேறு வெளிநாடுகளுக்கு விமானங்கள் இயக்கப்பட்டு வருகின்றன அவ்வாறு வந்து செல்லும் விமானங்களில் விமான பயணிகள் தங்கம் கடத்துவது வாடிக்கையாக உள்ளது. அந்த வகையில், சிங்கப்பூரிலிருந்து ஏர் இந்தியா எக்ஸ்பிரஸ் விமானம் திருச்சி வந்தது. இதில் வந்த பயணிகளை வான் நுண்ணறிவு பிரிவு அதிகாரிகள் சோதனை செய்தனர். அப்போது இரண்டு பெண் பயணிகள் கொண்டு வந்த கை பைகளை பரிசோதனை செய்தபோது,

அதில் மறைத்து எடுத்து வந்த கடத்தல் தங்கம் பறிமுதல் செய்யப்பட்டது.அந்த இரு பயணிகளிடம் இருந்து, 1007.500 கிராம் எடையுள்ள ரூபாய் 60 லட்சத்து 95 ஆயிரம் மதிப்பிலான 22 கேரட் தங்க நகைகள் பறிமுதல் செய்யப்பட்டது. சிங்கப்பூர் விமானத்தில் வந்த மலேசிய பயணிகள் இருவரையும் கைது செய்து அதிகாரிகள் விசாரணை நடத்தி வருகின்றனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

தற்போதைய செய்திகள்