திருச்சி சர்வதேச விமான நிலையத்திலிருந்து உலகின் பல்வேறு பகுதிகளுக்கு விமான போக்குவரத்து இயக்கப்பட்டு வருகிறது இதில் வரும் பயணிகள் தங்கம் மற்றும் வெளிநாட்டு கரன்சிகளை கடத்தி வருவதும் அதனை அவ்வப்போது சுங்கத்துறை அதிகாரிகள் பறிமுதல் செய்தும் வருவது தொடர் கதையாகி இருந்து வருகிறது.

இந்நிலையில் ஷர்ஜாவிலிருந்து ஏர் இந்தியா எக்ஸ்பிரஸ் விமானம் மூலம் திருச்சி விமான நிலையம் வந்த பயணிகளையும், அவர்களது உடமைகளையும் மத்திய வான் நுண்ணறிவு பிரிவு அதிகாரிகள் சோதனை செய்தனர்.அப்போது சந்தேகத்துக்கிடமாக இருந்த ஒரு ஆண் பயணியை அதிகாரிகள் சோதனையிட்டனர். அப்போது அவரிடம் இருந்து 66.68 லட்சம் மதிப்புள்ள 1061 கிராம் தங்கத்தை பசையாக மாற்றி கடத்தியது தெரிய வந்தது. அதனைத் தொடர்ந்து கடத்தல் தங்கத்தினை பறிமுதல் செய்த அதிகாரிகள் அந்த பயணியிடம் தொடர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

தற்போதைய செய்திகள்