திருச்சி விமான நிலையத்தில் நேற்று இரவு சிங்கப்பூரிலிருந்து வந்த விமானத்தில் பயணம் செய்த பயணிகளை விமான நிலைய வான் நுண்ணறிவு பிரிவு சுங்கத்துறை அதிகாரிகள் சோதனை செய்தனர். அப்பொழுது பெண் பயணி ஒருவர் தனது பேண்டில் சிறப்பு பாக்கெட்டுகளை தைத்து அதில் தங்கத்தை பேஸ்ட் வடிவில் மறைத்து எடுத்து வந்தது தெரிய வந்தது.

 இதனையடுத்து சுங்கத்துறை அதிகாரிகள் அந்தப் பெண் பயணியை கைது செய்து அவரிடம் இருந்து ரூபாய் 55 லட்சத்து 7 ஆயிரம் மதிப்புள்ள 909.500 கிராம் தங்கத்தை பறிமுதல் செய்து தொடர்ந்து அந்தப் பெண் பயணியிடம் சுங்கத்துறை அதிகாரிகள் விசாரணை நடத்தி வருகின்றனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

தற்போதைய செய்திகள்