அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிச்சாமி தலைமையேற்று, ஓபிஎஸ் அணியின் திருச்சி மாநகர் மாவட்ட பொருளாளரும் முன்னாள் பொன்மலை கோட்ட தலைவருமான மனோகரன் தலைமையில் நிர்வாகிகள் மற்றும் தொண்டர்கள் 50க்கும் மேற்பட்டோர் ஓபிஎஸ் அணியில் இருந்து விலகி இன்று காலை திருச்சி மாநகர மாவட்ட செயலாளரும் முன்னாள் துணை மேயருமான சீனிவாசன் முன்னிலையில் அதிமுகவில் இணைந்தனர். அவர்களுக்கு அதிமுக கட்சி துண்டை அணிவித்து வரவேற்றார்.

இந்நிகழ்வின்போது சிறுபான்மை பிரிவு மாவட்ட செயலாளர் ஜியாவுதீன், திருச்சி கிழக்கு தொகுதி இணை பொறுப்பாளர் ராஜசேகர், திருச்சி மாவட்ட வழக்கறிஞர் பிரிவு செயலாளர் ராஜா என்கிற சலாவுதீன், வட்ட செயலாளர்கள் வேல்முருகன், கோடி, சார்லஸ், அண்ணா தொழிற்சங்கம் மாவட்ட தலைவர் ரவி, , வட்ட பொருளாளர் பொம்மையன், வட்ட துணைச் செயலாளர் குமார், வட்ட அவை தலைவர் சண்முகம் உள்பட 50க்கும் மேற்பட்டோர் இன்று தாய்க்கழக மான அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழகத்தில் இணைந்தனர். அப்போதுதொழிற்சங்க மாவட்ட செயலாளர் தொழிற்சங்க மாவட்ட செயலாளர் ராஜேந்திரன், மாவட்ட ஐடி பிரிவு செயலாளர் வெங்கட் பிரபு, மற்றும் பலர் கலந்து கொண்டனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *