கர்நாடக சட்டமன்றத் தேர்தலில் இந்திய தேசிய காங்கிரஸ் தனது வெற்றியை கொண்டாடும் விதமாக திருச்சி மாநகர் மாவட்ட காங்கிரஸ் கமிட்டி சார்பில் மாவட்ட தலைவர் ஜவகர் தலைமையில் காங்கிரஸ் கட்சி அலுவலகமான அருணாச்சலம் மன்றத்திலிருந்து

பேரணியாக புறப்பட்டு சத்திரம் பேருந்து நிலையம் மெயின்கார்ட்கேட், மார்க்கெட் சென்று மரக்கடை வழியாக மீண்டும் கட்சி அலுவலகத்தை வந்து அடைந்தனர். அதனைத் தொடர்ந்து பொதுமக்களுக்கு இனிப்பு வழங்கியும், சாலையில் வெடி வெடித்தும் கட்சியினர் தங்கள் வெற்றியை கொண்டாடப்பட்டது.

இந்நிகழ்ச்சியில் கோட்டத் தலைவர் சிவாஜி சண்முகம் ரவி அண்ணா சிலை விக்டர், உறையூர் எத்திராஜூ சிவா,சிறுபான்மை பிரிவு தலைவர் சுபேர், மற்றும் காங்கிரஸ் நிர்வாகிகள் ஏராளமானோர் கலந்து கொண்டனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *