திருச்சி தெற்கு மாவட்டம் மாநகராட்சி நகராட்சி பேரூராட்சி ஒன்றிய பெருந்தலைவர்கள் சார்பாக முத்தமிழ் அறிஞர் டாக்டர் கலைஞர் அவர்களின் நூற்றாண்டு விழாவை முன்னிட்டு வலையொளி ஒளிப்பதிவு (PODCAST) வெளியீட்டு விழா திருச்சி கரூர் பைபாஸ் சாலை தனியார் ஹோட்டலில் இன்று நடைபெற்றது.

இந்நிகழ்ச்சிக்கு துணை மேயர் திவ்யா வரவேற்புரை ஆற்றினார். நிர்வாகிகள் குணசீலன், ஜெயநிர்மலா, சத்யா கோவிந்தராஜ், அமிர்தவல்லி சரண்யா ஆகியோர் முன்னிலை வகித்தனர். மாநகரக் கழகச் செயலாளர் மதிவாணன்‌ தலைமை தாங்கினார். விழாவுக்கு சிறப்பு அழைப்பாளராக தமிழக பள்ளிக்கல்வித்துறை அமைச்சரும், மாவட்ட கழக செயலாளருமான அன்பில் மகேஸ் பொய்யாமொழி மற்றும் தலைமை கொறடாவும், கழகச் செய்தி தொடர்பாளருமான டி கே எஸ் இளங்கோவன் ஆகியோர் வலையொலி ஒளி ஒளிப்பதிவு வெளியிட்டனர்.

இந்நிகழ்வில் மாநில மாவட்ட மாநகர கழக நிர்வாகிகள் சேகரன் செந்தில் செங்குட்டுவன் குணசேகரன் மூக்கன் லீலாவேலு சந்திரமோகன் செல்லையா சரோஜினி பகுதி கழக செயலாளர் மோகன் மற்றும் கழக நிர்வாகிகள் மாணவ மாணவிகள் கலந்து கொண்டு சிறப்பித்தனர்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *