மறைந்த தமிழக முன்னாள் முதல்வர் கலைஞரின் 101வது பிறந்தநாள் இன்று கொண்டாடப்படுகிறது. சென்னை மெரினாவில் உள்ள அண்ணா மற்றும் கலைஞர் நினைவிடங்களில் தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் மலர் தூவி மரியாதை செலுத்தினார். மேலும் தமிழக முழுவதும் திமுகவினர் கலைஞர் பிறந்த நாளை கொண்டாடி வருகின்றனர்.

அந்த வகையில் திருச்சி கலைஞர் அறிவாலயத்தில் உள்ள அண்ணா மற்றும் கலைஞரின் திரு உருவ சிலைகளுக்கு பெரம்பலூர் நாடாளுமன்ற உறுப்பினர் கே என் அருண் நேரு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார் அருகில் மாநகர செயலாளர் மேயருமான அன்பழகன் ஸ்ரீரங்கம் எம்எல்ஏ பழனியாண்டி கவுன்சிலர் முத்து செல்வம் மற்றும் திமுக நிர்வாகிகள் உடன் இருந்தனர்.

இதேபோல் தென்னூர் பகுதியில் வட்ட செயலாளர் காளை தலைமையில் அன்னதானம் மற்றும் நலத்திட்ட உதவிகள் வழங்கப்பட்டது.

மேலும் தில்லை நகர் பகுதியில் பகுதி செயலாளர் கண்ணன் தலைமையில் கோட்டை தலைவர் விஜயலட்சுமி கண்ணன் அன்னதானம் வழங்கினார்.

இதேபோல் திருச்சி உறையூர் பகுதி செயலாளர் இளங்கோவன் தலைமையில் மாநகராட்சி மேயர் அன்பழகன் கலந்துகொண்டு பள்ளி மாணவ மாணவிகளுக்கு நோட்டு புத்தகங்கள் மற்றும் அன்னதானம் வழங்கினார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *