மறைந்த தமிழக முன்னாள் முதல்வரும் திமுக தலைவருமான கலைஞர் கருணாநிதியின் 102 வது பிறந்த நாளை முன்னிட்டு திருச்சி சத்திரம் பேருந்து நிலையம் அருகே கலைஞர் அறிவாலயத்தில் உள்ள அவரது திருவுருவு சிலைக்கு மத்திய மற்றும் வடக்கு மாவட்ட திமுக சார்பில் வடக்கு மாவட்ட செயலாளர் காடுவெட்டி தியாகராஜன் தலைமையில் மாநகராட்சி மேயர் அன்பழகன், முன்னிலையில் திமுகவினர் கலைஞரின் திருவுருவ சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார்கள்.

அவனைத் தொடர்ந்து திராவிட முன்னேற்ற கட்சியின் கொடியை ஏற்றி வைத்து பொதுமக்களுக்கு இணைப்பு வழங்கினர் மேலும் திருச்சி வயலூர் மெயின் ரோட்டில் கலைஞரின் படத்திற்கு மலர் தூவி பொதுமக்களுக்கு அன்னதானம் வழங்கப்பட்டது.

இந்நிகழ்வில் அவை தலைவர் அம்பிகாவதி மற்றும் கழக நிர்வாகிகள் கண்ணன் ,ராம்குமார், நாகராஜ் ,, மாநகராட்சி மண்டல தலைவர்கள் விஜயலட்சுமி கண்ணன், துர்கா தேவி, மகளீர் அணி நிர்வாகி மதனா, திமுக நிர்வாகி சிக்கந்தர் மற்றும் மாவட்ட கழக, மாநகர கழக நிர்வாகிகள், தலைமை செயற்குழு பொதுக்குழு உறுப்பினர்கள், பகுதி கழக,வட்ட கழக செயலாளர்கள், மாவட்ட பிரதிநிதிகள், பலர் கலந்து கொண்டனர்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

தற்போதைய செய்திகள்