கலை, இலக்கிய, அரசியல் பேராசான் தோழர் ஜீவனினுடைய 61 வது ஆண்டு நினைவு தினத்தை முன்னிட்டு இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் திருச்சி மாவட்ட அலுவலகத்தில் மாவட்ட துணைச் செயலாளர் செல்வகுமார் தலைமையில் புகழஞ்சலி நிகழ்ச்சி நடைபெற்றது. நிகழ்ச்சிக்கு மாவட்டச் செயலாளர் சிவா முன்னிலை வகித்தார்.

மத்திய கட்டுப்பாட்டு குழு உறுப்பினர் செல்வராஜ் பேராசான் ஜீவாவின் புகழை விளக்கி பேசி சிறப்புரையாற்றினார்‌. இதில் ஏஐடியுசி பொதுச் செயலாளர் சுரேஷ், தலைவர் நடராஜா, இந்திய கம்யூனிஸ்ட் கட்சி மாவட்ட பொருளாளர் சண்முகம், மாநகர் மாவட்ட இடைக்கமிட்டி செயலாளர் சுரேஷ் முத்துசாமி, ஆகியோர் கலந்து கொண்டனர். இறுதியாக அபிஷேகபுரம் பகுதி செயலாளர் அஞ்சுகம் நன்றி கூறினார்.

தொடர்ந்து இந்திய கம்யூனிஸ்ட் கட்சி மேற்கு பகுதி குழுவிற்கு உட்பட்ட வண்ணாரப்பேட்டை பகுதியில் புதிய கட்சி கிளை அமைக்கப்பட்டது. இதற்கு கிளைச் செயலாளர் பல்கீஸ் சுவேதா தலைமை வகித்தார். கட்சிக்கொடியை மாவட்ட செயலாளர் சிவா ஏற்றி வைத்தார். ஏஐடியுசி பொதுச் செயலாளர் சுரேஷ் சிறப்புரை ஆற்றினார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

தற்போதைய செய்திகள்