காங்கிரஸ் மூத்த தலைவரும், எம்பியுமான ராகுல் காந்தி‌ தனது 54 வது பிறந்தநாளை இன்று கொண்டாடினார்.. அவரது பிறந்த நாளை முன்னிட்டு காங்கிரஸ் கட்சி தலைவர் ராகுல் காந்திக்கு அனைத்து கட்சியை சேர்ந்த தலைவர்கள் நடிகர்கள் தொழில் அதிபர்கள் பொதுமக்கள் உள்ளிட்ட ஏராளமானோர் தங்களின் பிறந்த நாள் வாழ்த்துக்களை தெரிவித்து வருகிறன்றனர்.

அந்த வகையில் காங்கிரஸ் கட்சி தலைவர் ராகுல் காந்தியின் பிறந்த நாளை முன்னிட்டு திருச்சி மகளீர் காங்கிரஸ் மாவட்ட தலைவி ஷீலா செலஸ் ஏற்பாட்டில் திருச்சி புத்தூர் அரசு தலைமை மருத்துவமனை பின்புறம் உள்ள சாந்தி விழாவில் உள்ள முதியவர்களுக்கு இன்று காலை உணவு வழங்கப்பட்டது.

இந்நிகழ்ச்சிக்கு சிறப்பு அழைப்பாளராக திருச்சி மாநகர் மாவட்ட தலைவர் ரெக்ஸ் கலந்துகொண்டு முதியவர்களுக்கு காலை உணவை வழங்கினார் , இந்நிகழ்வில் திருச்சி காங்கிரஸ் கட்சியின் துணை தலைவி கோகிலா , பொது செயலாளர் கீதா , கோட்ட தலைவர்கள் மணிவேல் அண்ணாதுரை, மலர் வெங்கடேஷ் உள்ளிட்டோர் பங்கேற்றனர் .

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

தற்போதைய செய்திகள்