அகில இந்திய காங்கிரஸ் கட்சியின் தலைவர் ராகுல் காந்தி mp அவர்களின் பிறந்தநாளை முன்னிட்டு திருச்சி ஏர்போர்ட் எதிரில் அமைந்துள்ள JMJ முதியோர் மற்றும் மாற்றுத்திறனாளிகள் இல்லத்தில், மத்திய மாநில முன்னாள் அமைச்சர், தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டியின் முன்னாள் தலைவர், திருச்சி பாராளுமன்ற முன்னாள் உறுப்பினர் திருநாவுக்கரசர் அவர்கள் அன்னதானம் வழங்கினார். திருச்சி மாநகர் மாவட்ட தலைவரும் , கவுன்சிலருமான எல். ரெக்ஸ் தலைமையில், ஏர்போர்ட் கோட்ட தலைவர் கனகராஜ் முன்னிலையில் நடைபெற்றது.

முன்னதாக பொருளாளர் முரளி தலைமையில் மலைக்கோட்டை மாணிக்க விநாயகர் கோவிலில் அபிஷேக் ஆராதனை நடைபெற்றது. புத்தூர் கோட்டத்தலைவர் மலர் வெங்கடேஷ் தலைமையில் அமைதி இல்ல முதியோர்களுக்கு கவுன்சிலர் சோபியா விமலா ராணி அவர்கள் காலை உணவு வழங்கினார். மலைக்கோட்டை கோட்ட தலைவர் வெங்கடேஷ் காந்தி தலைமையில் மைத்ரேயி பள்ளி குழந்தைகளுக்கு கல்வி உபகரனங்கள் வழங்கப்பட்டது. காட்டூர் கோட்ட தலைவர் ராஜா டேனியல் ராய் தலைமையில் அந்தோணியார் கோவில் முதியோர்களுக்கு மதிய உணவு வழங்கப்பட்டது. ஸ்ரீரங்கம் கோட்ட தலைவர் ஜெயம் கோபி தலைமையில் கங்காரு கருணை இல்லத்தில் மதிய உணவு வழங்கப்பட்டது. மார்க்கெட் கோட்ட தலைவர் பகதூர்ஷா தலைமையில் நாதர்ஷா பள்ளிவாசலில் சிறப்பு பிரார்த்தனை நடைபெற்றது.

 நிகழ்வில் கோட்ட தலைவர்கள் அழகர், பிரியங்கா பட்டேல், பாக்யராஜ், எட்வின், அணித்தலைவர்கள் முன்னாள் ராணுவ பிரிவு ராஜசேகர், மகிளா ஷீலா செலஸ், அஞ்சு, இளைஞர் காங்கிரஸ் விஜய் பட்டேல், ஆர்டிஐ பிரிவு கிளமெண்ட், கலைபிரிவு அருள், அமைப்புசார பிரிவு மகேஷ், மாணவர் காங்கிரஸ் நரேன், இந்திரா தோழி மாரிஸ்வரி, சிறுபான்மை பிரிவு மொய்தின்,இலக்கிய அணி பத்பநாதன், மனித உரிமை எஸ் ஆர் ஆறுமுகம், ரீகன், ரபிக், சம்பத், பூபாலன், சையது, மூர்த்தி, வெங்கடேஷ், ஆரிப், லயன் சாந்தி, சத்தியா, செந்தமிழ் செல்வம் மற்றும் நிர்வாகிகள் பலர் கலந்துகொண்டு சிறப்பித்தனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

தற்போதைய செய்திகள்