தென்ஆப்பிரிக்கா, சன்சிட்டியில் கடந்த 8ம் தேதி முதல் 14ஆம் தேதி வரை பவர் லிப்ட் சாம்பியன் போட்டிகள் நடைபெற்றது. இந்த போட்டியில் திருச்சி மாவட்டம், மணப்பாறை சேர்ந்த ராஜேஸ்வரி 69- எடை பிரிவில் 3-தங்கமும், 1-வெள்ளிப் பதக்கமும், பாலமுருகன் 120 எடைப் பிரிவில் தங்கப்பதக்கம், இதேபோல் திருச்சி ஏர்போர்ட் பகுதியை சேர்ந்த ஷேக்அப்துல்லா 59-எடைப்பிரிவில் தங்கப்பதக்கம் பெற்றுள்ளனர்.

வெற்றி பெற்ற வீரர்கள் இன்று திருச்சி விமான நிலையத்துக்கு வந்தடைந்தனர். அவர்களை திருச்சி மாவட்டம் பளுதூக்கும் சங்கத்தின் மாவட்ட செயலாளர் சுபேர் மற்றும் வெற்றி பெற்ற வீரர்களின் குடும்பத்தினர், கல்லூரி நண்பர்கள், ஜென்னிஸ் கல்லூரியின் அஜய் மற்றும் அருள்மொழி ஆகியோர் வெற்றி பெற்ற வீரர்களுக்கு ரோஜா பூ மாலை மற்றும் பொன்னாடை அணிவித்து மேள, தாளத்துடன் ஊர்வலமாக அழைத்துச் சென்றனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

தற்போதைய செய்திகள்