தமிழ்நாடு ஆரம்பப்பள்ளி ஆசிரியர் கூட்டணியின் சார்பில் அரசு உதவிபெறும் பள்ளி மாணவர்கள மற்றும் சிறுபான்மை மாணவர்கள் உரிமை மீட்பு மாநாடு திருச்சி தூய வளனார் கல்லூரியில் இன்று நடைபெற்றது. மாநாட்டிற்கு சங்கத்தின் மாநில தலைவர் மணிமேகலை தலைமை வகித்தார். தமிழ்நாடு அரசு ஊழியர் சங்கத்தின் மாநில தலைவர் அன்பரசு மாநாட்டை தொடக்கி வைத்து உரையாற்றினார். மாநாட்டில் மாநிலம் முழுவதும் இருந்து நிர்வாகிகள், உறுப்பினர்கள் ஏராளமானோர் கலந்து கொண்டனர். தொடர்ந்து மாநில பொது செயலாளர் மயில் செய்தியாளர்களிடம் கூறுகையில்….

அரசு பள்ளியில் பயிலும் மாணவர்கள் மருத்துவம் உள்ளிட்ட உயர் படிப்புகளில் சேர தமிழ்நாடு அரசு 7.5 சதவிகித தனி இட ஒதுக்கீடு வழங்கி உள்ளதை, நீதியரசர் கலையரசன் குழு பரிந்துரை மற்றும் அரசு பள்ளி மாணவர்களின் எண்ணிக்கை ஆகியவற்றை கருத்தில் கொண்டு 15 சதவீதமாக உயர்த்தி வழங்க வேண்டும். மேலும் தமிழ்நாடு அரசு தற்போது நடைமுறைக்கு கொண்டு வந்துள்ள 1 முதல் 5 ஆம் வகுப்பு வரையுள்ள மாணவர்களுக்கான காலை சிற்றுண்டி திட்டத்தை அரசு உதவி பெறும் பள்ளிகளில் பயிலும் ஏழை மாணவர்களின் நலன் கருதி அவர்களுக்கும் இத்திட்டத்தை தமிழக அரசு விரிவு படுத்த வேண்டும் என தெரிவித்தார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

தற்போதைய செய்திகள்