காவேரி குழும மருத்துவமனைகள், பெண்கள் மற்றும் குழந்தைகளுக்காக பிரத்யேகமாக அமைக்கப்படடுள்ள 200 படுக்கைகள் கொண்ட அதி நவீன மருத்துவ மனையான மா காவேரி திறப்பு விழா நடைபெற்றது. நகர்ப்புற வளர்ச்சி துறை அமைச்சர் கே. என் .நேரு மருத்துவமனையை திறந்து வைத்து குத்துவிளக்கு ஏற்றி வைத்தார். விழாவில் மாநகராட்சி மேயர் அன்பழகன் சிறப்பு அழைப்பாளராக கலந்து கொண்டார்.

விழாவிற்கு காவேரி குழும மருத்துவமனைகளின் நிறுவனர் மற்றும் செயல் தலைவர் டாக்டர் சந்திரகுமார், காவேரி குழும மருத்துவமனைகளின் நிறுவனர் மற்றும் நிர்வாக இயக்குநர் டாக்டர் மணி வண்ணன். காவேரி குழும மருத்துவ மனைகளின் இணை நிறுவனர் மற்றும் செயல் இயக்குனரும், தலைமை குழந்தைகள் நல மருத்துவருமான டாக்டர். செங்குட்டுவன் ஆகியோர் தலைமை தாங்கினார் . இந்த திறப்பு விழாவில் ஏராளமான பொதுமக்கள் கலந்துகொண்டனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *