இந்தியாவிலேயே முதல்முறையாக முப்படை ஓய்வூதியதாரர்களுக்கான சிறப்பு குறை தீர்க்கும் முகாம் திருச்சி மன்னார் புரத்தில் இன்று நடைபெற்றது. இந்த முகாமில் சிறப்பு விருந்தினராக மத்திய இணை அமைச்சர் எல்.முருகன் கலந்து கொண்டார். சிடிஏ ஜெயசீலன் தலைமை தாங்கினார். இம்முகாமில் திருச்சி, தஞ்சை, புதுக்கோட்டை கரூர் உள்ளிட்ட தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்களில் இருந்தும் ஐயாயிரத்துக்கும் மேற்பட்ட ஓய்வூதியதாரர்கள் கலந்து கொண்டுள்ளனர். பல்லாண்டுகளாக ஓய்வூதியம் பெற முடியாதவர்களும் நேரடியாக இங்கு வந்து உரிய தீர்வு காண உள்ளனர். இந்த முகாமிற்கு வர முடியாதவர்களுக்கு உதவிடும் வகையில் ஐந்து நடமாடும் வாகனங்களும் அறிமுகப்படுத்தப் பட்டுள்ளது. இந்த ஐந்து வாகனங்களும் தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் சென்று ஓய்வூதியதாரர்களின் குறைகளை கண்டறிந்து உரிய தீர்வை பெற முடியும். இந்த முகாமின் மூலம் நூற்றுக்கணக்கான ஓய்வுதாரர்களுக்கு 1.5 கோடி ரூபாய் நிலுவையில் இருந்த ஓய்வூதியம் வழங்கப்படுகிறது.

முன்னதாக அமைச்சர் முருகன் நிருபர்களிடம் கூறும்போது, மத்திய அரசு ஓய்வூதியர்களின் குறைகளை தீர்க்கும் வகையில் இது போன்ற ஓய்வு முகாம்கள் நடைமுறைப் படுத்தப்படுகிறது. ஏறத்தாழ ஆறாயிரம் பேர் இந்த முகம் மூலம் முகாமில் பங்கேற்றுள்ளனர். இன்று மாலைக்குள் ஆறாயிரம் ஓய்வூதியதாரர்களின் குறைகள் தீர்க்கும் தீர்க்கப்படும். அதற்காக அரசு வேகமாக செயல்படுகிறது. இன்று அறிமுகப்படுத்தப்பட்டுள்ள நடமாடும் வாகனங்கள் மூலம் கிராமப்புறங்களில் உள்ள முன்னாள் ராணுவ வீரர்கள் பயன்பெறுவார்கள். பொதுமக்களை அலைக்கழிக்க கூடாது என்பதற்காக பொதுமக்களை தேடி இந்த வாகனங்கள் இயக்கப்படுகிறது. இந்தியா முழுவதும் மாவட்ட அளவில் 206 முகாம்கள் நடத்தப்பட்டுள்ளது. இன்றைக்கு நமக்கான ஆயுத தளபாடங்களை நாமே தயாரித்துக் கொள்ள முடிகிறது ஒரு கைடார் உத்தர பிரதேசத்திலும் இரண்டாவது தமிழகத்தில் திருச்சி கோயம்புத்தூரில் டிபன்ஸ் காரிடார் உருவாக்கப்படுகிறது.

ஏறத்தாழ ஐம்பதாயிரம் கோடி ரூபாய் அளவிற்கு ராணுவ தளபாடங்கள் இந்தியாவில் இருந்து ஏற்றுமதி செய்யப்படுகிறது.மேக் இன் இந்தியா திட்டத்தின் மூலம் ராணுவ தளவாடங்களை நாமே உற்பத்தி செய்து கொள்கிறோம்.. பல்வேறு நாட்களாக விடுக்கப்பட்ட கோரிக்கையான ஒரே பதவி ஒரே ஊதியம் திட்டத்தை பாஜக அரசு நடைமுறைப்படுத்தி உள்ளது. முப்படைகளுக்குமான முதன்மை அதிகாரி பதவி உருவாக்கப்பட்டது. நவீன சாதனங்களை உருவாக்க வேண்டும் என ஆண்டுதோறும் பட்ஜெட்டில் உள்நாட்டு உற்பத்தியை மேம்படுத்தும் வகையில் 25 சதவீத நிதி ஒதுக்கப்படுகிறது. நம்முடைய நம் இந்தியாவின் பாதுகாப்பிற்கு பாதுகாப்பை உறுதி செய்யும் வகையில் சுமார் 5,000 மீட்டர் உயரத்தில் பறக்க கூடிய ஹெலிகாப்டர்கள் உற்பத்தி செய்யப்படுகிறதுஇவ்வாறு அவர் கூறினார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

தற்போதைய செய்திகள்