திருச்சி கிழக்கு மேற்கு தாலுகாவிற்கு உட்பட்ட மாநகராட்சி 62-வது வார்டு பஞ்சப்பூர் கிராமத்தில் பல ஆண்டுகளாக குடியிருக்கும் மக்களுக்கு வகை மாற்றம் செய்து நத்தமாக்கி குடிமனை பட்டா வழங்கிடக்கோரி பஞ்சப்பூர் பகுதி மக்கள் மற்றும் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியினர் திருச்சி கிழக்கு வட்டாட்சியர் அலுவலகம் முன்பு காத்திருக்கு போராட்டத்தில் ஈடுபட்டனர் இந்த காத்திருப்பு போராட்டத்திற்கு பகுதி செயலாளர் வேலுச்சாமி தலைமை தாங்கினார்.

 மேலும் மாணவர் மாவட்ட செயலாளர் ராஜா மாநில குழு உறுப்பினர் ஸ்ரீதர் ஆகியோர் முன்னிலை வகித்தனர். முன்னதாக தமிழக நகராட்சி நிர்வாக துறை அமைச்சர் கே என் நேரு மற்றும் ஸ்ரீரங்கம் சட்டமன்ற உறுப்பினர் பழனியாண்டி ஆகியோர் சட்டமன்றத்தில் குடிமனை பட்டா வழங்குவது சம்பந்தமாக தீர்மானம் நிறைவேற்ற வேண்டுமென வலியுறுத்தி

 சாலையில் இருந்து ஊர்வலமாக வந்த அபிஷேகபுரம் பகுதி கிளை மக்கள் மற்றும் பஞ்சபூர் பொதுமக்கள் உள்ளிட்ட 200-க்கும் மேற்பட்டோர் வட்டாட்சியர் அலுவலகத்தை முற்றுகையிட்டதால் பரபரப்பு ஏற்பட்டது.

அதனை தொடர்ந்து போலீசார் சமாதான பேச்சுவார்த்தை நடத்தியதை தொடர்ந்து அலுவலக முன்பு காத்திருப்பு போராட்டத்தில் பொதுமக்கள் ஈடுபட்டு வருகின்றனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *