பொதுமக்கள் குப்பைகளை தெருவோரம் வீசி செல்வதை தடுக்கும் வகையில் வீடுகளுக்கு வந்து பெற்றுச்செல்லும் திடக்கழிவு மேலாண்மை தூய்மை பணியாளர்களிடம் கொடுப்பதை வலியுறுத்தும் வகையில் திருச்சி மாநகராட்சி வார்டு எண் 23 செவ்ந்தி பிள்ளையார் கோவில் தெரு பகுதியில்

 குப்பை கழிவுகளால் காட்சியளித்த இடத்தை அழகிய பூங்காவாக்கி தூய்மையான இடமாக 23 வது வார்டு ஏரியா மேனேஜர் நளினி தலைமையில் தூய்மை பணியாளர்களால் குப்பை கழிவுகள் அகற்றப்பட்டு தூய்மை செய்யப்பட்டு உருவாக்கப்பட்ட அழகிய நந்தவனம்

 இந்நிகழ்வில் மாமன்ற உறுப்பினர் க.சுரேஷ் குமார், ஐந்தாவது மண்டல ஏரியா மேனேஜர் விஜயலட்சுமி, திருச்சிராப்பள்ளி மாநகராட்சி இளநிலை பொறியாளர் ரமேஷ் வேதா நிறுவன செயல் தலைவர் கிஷோர், மனித வள மேம்பாட்டு மேலாளர் சுப்பிரமணியம் உள்ளிட்டோரும் பங்கேற்றனர். குப்பை மேடை நந்தவனம் ஆக்கிய கவுன்சிலர் சுரேஷ் மற்றும் தூய்மை பணியாளர்களுக்கு அப்பகுதி பொதுமக்கள் தங்களின் பாராட்டுகளையும் வாழ்த்துக்கள் தெரிவித்து வருகின்றனர். குறிப்பாக 23 வது வார்டு கவுன்சிலர் சுரேஷ் இப்பகுதியில் பல்வேறு திட்டங்களையும் பொதுமக்களுக்கு சேவைகளை ஆற்றி வருவது குறிப்பிடத்தக்கது

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

தற்போதைய செய்திகள்