திருச்சி ஸ்ரீரங்கம் ரயில் நிலையத்திற்கும் வாளாடி ரயில் நிலையத்திற்கும் இடையே கூத்தூர் ரயில்வே மேம்பாலத்தில் அடியில் சுமார் 40 வயது மதிக்கத்தக்க ஆண் நபர் அவ்வழியே வந்த ஏதோ ஒரு ரயில் வண்டியில் அடிபட்டு சம்பவ இடத்திலேயே உடல் சிதறி இறந்துள்ளார். மேற்படி நபர் வெள்ளை நிற கோடு போட்ட முழுக்கை ரெடிமேட் சட்டையும், ஊதா நிறத்தில் வெள்ளை கட்டம் போட்ட கைலியும் மற்றும் கரு நீல கலரில் ஸ்போர்ட்ஸ் டவுசரும் அணிந்துள்ளார்.

வலது கையில் உட்புறத்தில் Appa என்று பச்சை குத்தியுள்ளார். மேற்படி பிரேதத்தை திருச்சி இருப்புப் பாதை காவல் நிலைய சிறப்பு உதவி ஆய்வாளர் கிருஷ்ணன் அவர்கள் கைப்பற்றி திருச்சி அரசு மருத்துவமனை சவக்கிடங்கிற்கு அனுப்பி விசாரணை செய்து வருகிறார், இறந்த நபரை பற்றி தகவல் ஏதேனும் இருப்பின் தெரிவிக்க வேண்டிய தொலைபேசி எண்கள் 90805 63321 மற்றும் 94981 39752.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

தற்போதைய செய்திகள்