திருச்சி உறையூரை சேர்ந்த சுப்பிரமணி என்பவரது மகன் குணசேகர் (வயது 55).இவருக்கு ராணி என்ற மனைவியும், விஜயகுமார், தர்மா என்ற இரு மகன்களும், ரேவதி என்ற மகளும் உள்ளனர். கடந்த 15 வருடங்களுக்கு முன்பு கருத்து வேறுபாட்டால் தனது மனைவியை பிரிந்து வாழ்ந்த குணசேகர் கொத்தனார் வேலை செய்து வந்தார். மது பழக்கத்திற்கு அடிமையான இவர் மதுபோதையில் சாலை ஒரத்தில் உறங்குவது வழக்கம்.

இந்த நிலையில் நேற்றிரவு குணசேகர் ராமலிங்கநகர் அருகே சாலையோரத்தில் நண்பர்களுடன் அமர்ந்து மது அருந்தியுள்ளார். அப்போது அவருக்கும் அவரது நண்பர்களுக்கும் இடையே தகராறு ஏற்பட்டுள்ளது. ஒரு கட்டத்தில் அங்கிருந்த கல்லை எடுத்து அவரது நண்பர்கள் குணசேகர் தலையில் அடித்ததில் குணசேகர் சம்பவ இடத்திலேயே இறந்து விட்டதாக கூறப்படுகிறது.

இன்று காலை அவ்வழியாக சென்றவர்கள், குணசேகர் ரத்த வெள்ளத்தில் பேச்சு மூச்சின்றி கிடப்பதைக் கண்டு காவல் துறையினருக்கு தகவல் தெரிவித்தனர். இந்த குறித்து தகவல் அறிந்த உறையூர் போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து இறந்த உடலை மீட்டு திருச்சி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.மேலும் இச்சம்பவம் குறித்து வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *