திருச்சி மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் மாவட்ட ஆட்சித் தலைவர் பிரதீப் குமார் தலைமையில் இன்று நடைபெற்றது இந்த கூட்டத்தில் காரைக்குடி பகுதி சேர்ந்த தேவசேனா என்பவர் கலெக்டரிடம் புகார் மனு ஒன்று அளித்தார் அந்த புகார் மனுவில் கூறியிருப்பதாவது:-

திருச்சி காரைக்குடி பகுதியை சேர்ந்தவர் தேவசேனா. இவர் திருச்சி தில்லை நகர் பகுதியில் இயங்கி வரும் ரைட் சிட்டி என்ற நிறுவனத்தில் வாடிக்கையாளர்கள் அளிக்கும் பணத்தை இரண்டே வருடங்களில் இரட்டிப்பு செய்து தருவதாக கூறியதை அடுத்து கடந்த 2018-ம் ஆண்டு தேவசேனா ரூபாய் 82 லட்சம் பணத்தை ரைட் சிட்டி உரிமையாளர்களான சுகன்யா கிருஷ்ணமூர்த்தி கமலவேணி சதீஷ் ரீவான பேகம் ஆகியரிடம் வழங்கினார்.

 இந்நிலையில் கடந்த 5 வருடங்கள் ஆகியும் பணம் திரும்ப தரப்படாததால் பாதிக்கப்பட்ட தேவசேனா தேவிகா ஷில்பா கண்ணன் ராஜ் ஆகியோர் இன்று காலை திருச்சி மாவட்ட ஆட்சித் தலைவர் பிரதீப் குமாரிடம் தங்களை ஏமாற்றி பணம் பறித்தவர்கள் மீது நடவடிக்கை எடுக்கக் கோரியும் தங்களை ஏமாற்றி வாங்கிய ஒன்றரை கோடி பணத்தை மீட்டு தர கோரியும் மனு அளித்தனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *