திருவண்ணாமலை மாவட்டம், பெரணமல்லூர் ஒன்றியம், கோழிப்புலியூர் ஊராட்சி ஒன்றிய நடுநிலைப் பள்ளியின் ஆண்டு விழா இன்று நடைபெற்றது. இந்த பள்ளி ஆண்டு விழாவில் பெரணமல்லூர் வட்டார கல்வி அலுவலர்கள் குணசேகரன், ஆறுமுகம், SWADD தொண்டு நிறுவனர் யுவராஜ் ஆகியோர் சிறப்பு விருந்தினர்களாக கலந்து கொண்டனர்.
மேலும் ஆண்டு விழாவில் தங்களின் கலைத் திறமைகளை வெளிக்காட்டிய மாணவ, மாணவிகளுக்கு பரிசுகளை வழங்கி பாராட்டினர். விழாவில் மாணவ, மாணவிகள், ஆசிரியர்கள் மற்றும் பெற்றோர்கள் கலந்து கொண்டனர்.