திருச்சி மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் வாரம் தோறும் நடைபெறும் மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டத்தில் திருச்சி மாவட்டத்தில் உள்ள பல்வேறு பகுதியை சேர்ந்த பொதுமக்கள் தங்களின் கோரிக்கைகளை மனுக்களாக எழுதி மாவட்ட ஆட்சித் தலைவரிடம் இன்று அளித்தனர் அந்த வகையில் திருச்சி துவரங்குறிச்சி பகுதியை சேர்ந்த பொதுமக்கள் மற்றும் விஷ்வ ஹிந்து பரிஷத் சார்பாக இன்று காலை மாவட்ட ஆட்சித் தலைவர் பிரதீப் குமாரிடம் கோரிக்கை மனு ஒன்றை அளித்தனர்

அந்த மனுவில் கூறியிருப்பதாவது:- திருச்சி மாவட்டம் மருங்காபுரி தாலுகா துவரங்குறிச்சி பகுதியில் அருள்மிகு பூதநாயகி அம்மன் மற்றும் வெள்ளை விநாயகர் கோவில் உள்ளது இந்த கோவிலுக்கு சொந்தமான இடம் குறித்த பிரச்சனை கடந்த பல வருடங்களாக நடந்து வருகிறது இந்தப் பிரச்சனைக்கு தீர்வு காணும் விதமாக கடந்த 1970ம் ஆண்டு முதல் இப்பகுதியை சேர்ந்த ஹிந்து, முஸ்லீம் இடையே போடப்பட்ட ஒப்பந்தத்தை சரியாக நடை முறை படுத்த கோரியும் , மேலும் மெட்ராஸ் உயர் நீதி மன்றம் கடந்த 2006-ம் ஆண்டு வழங்கிய தீர்பாணையை நடைமுறை படுத்த கோரி விஷ்வ ஹிந்து பரிஷத் மாநில பொறுப்பாளர் ஆனந்த் ஜி தலைமையில் முன்னாள் மாநில பொறுப்பாளர் பாண்டியன் ஜி வழிகாட்டுதலுடன் மாவட்ட பொறுப்பாளர் மற்றும் ஒன்றிய கிளை நிர்வாகிகள் மற்றும் திருச்சி மாவட்ட இணை செயலாளர் பரமசிவம் உள்ளிட்டோர் மாவட்ட ஆட்சித் தலைவர் பிரதீப் குமாரிடம் கோரிக்கை மனு அளித்தனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

தற்போதைய செய்திகள்