சக்தி யோகாலயம் சார்பில் திருச்சி வயலூர் மெயின் ரோடு சீனிவாசா நகர் பகுதியில் உள்ள சக்தி யோகாலயம் மையத்தில் மாவட்ட அளவிலான யோகா போட்டி கடந்த நாலாம் தேதி மற்றும் ஐந்தாம் தேதி ஆகிய இரு தினங்களாக நடைபெற்றது.

இந்த மாவட்ட அளவிலான யோகாசனப் போட்டிக்கு சக்தி யோகாலயம் நிறுவனர் இளையராஜா மற்றும் கவிதா இளையராஜா ஆகியோர் தலைமை தாங்கிட சிறப்பு அழைப்பாளராக ஸ்ரீ இந்திரா கணேசன் இன்ஸ்டிட்யூட் ஆஃப் மெடிக்கல் சயின்ஸ் மற்றும் யோகா மெடிக்கல் காலேஜ் முதல்வர் விவேகானந்தா மற்றும் பனானா லீப் உரிமையாளர் மனோகரன் வாலிபால் அசோசியேஷன் சேர்மன் தமிழ்ச்செல்வன் ஆகியோர் கலந்துகொண்டு போட்டிகளை தொடங்கி வைத்தனர்.

இந்த போட்டிக்கு திருச்சி மாவட்டத்திலிருந்து பல்வேறு பள்ளிகளை சேர்ந்த மாணவ மாணவிகள் கலந்துகொண்டு யோகாசனத்தில் தங்களின் தனி திறமைகளை வெளிப்படுத்தினர். அதனைத் தொடர்ந்து நேற்று மாலை மாவட்ட அளவிலான யோகாசனப் போட்டியில் வெற்றி பெற்ற மாணவ மாணவிகளுக்கு தேசியக் கல்லூரி துணை முதல்வர் பிரசன்ன பாலாஜி

திருச்சி மாவட்ட வாலிபால் அசோசியேஷன் தலைவர் தங்க பிச்சையப்பா ஜோசப் கல்லூரி துணை முதல்வர் ரவீந்திரன் டாக்டர் ராதாகிருஷ்ணன் ஸ்டேட் அவார்டெட் பள்ளி தலைமையாசிரியர் சைவ ராஜு மற்றும் வாலிபால் அசோசியேஷன் செயலாளர் கோவிந்தராஜ் ஆகியோர் கலந்து கொண்டு மாணவ மாணவிகளுக்கு பரிசுகள் வழங்கி பாராட்டு தெரிவித்தனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *