திருச்சி கி. ஆ. பெ. விஸ்வநாதன் மேல்நிலைப் பள்ளியில் கலைஞர் நூற்றாண்டு விழாவை முன்னிட்டு பள்ளி மாணவர்கள் பங்கேற்ற சட்டமன்ற நாயகர் கலைஞர் எனும் தலைப்பில் கருத்தரங்கு அரசு தலைமைக் கொறடா முனைவர் செழியன் தலைமையில் இன்று நடைபெற்றது.

இக்கருத்தரங்கில் கலந்து கொண்டு பேச்சுப்போட்டியில் வெற்றி பெற்ற மாணவர்களுக்கு பாராட்டு சான்றிதழ் வழங்கினார். இந்நிகழ்வில் மாநகராட்சி மேயர் அன்பழகன் சட்டமன்ற உறுப்பினர் தியாகராஜன்,

மாவட்ட ஊராட்சிக் குழுத்தலைவர் இராஜேந்திரன், வருவாய் கோட்டாட்சியர் பார்த்திபன், மாவட்ட கல்வி அலுவலர் கிருஷ்ணபிரியா, அரசு சட்டப்பேரவை கூடுதல் செயலாளர் ரவிச்சந்திரன், மண்டல தலைவர்கள், ஆசிரியர்கள், பள்ளி மாணவர்கள் கலந்து கொண்டனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

தற்போதைய செய்திகள்