பொதுத்துறை நிறுவனங்களை தனியாருக்கு தாரை வார்க்கக் கூடாது, கேஸ், பெட்ரோல், டீசல் விலையை குறைக்க வேண்டும். சாலை சுங்க வரியை குறைக்க வேண்டும். சிபிஐ மூலமாக எதிர்க்கட்சிகளை மிரட்டக்கூடாது, இந்திய இளைஞர்களுக்கு வேலை வழங்க வேண்டும். அதானி சம்பந்தப்பட்ட ஊழலை விசாரிக்க பாராளுமன்ற கூட்டு குழு அமைத்திட வேண்டும் .கார்ப்பரேட் கம்பெனிகளுக்கு துணை போகக்கூடாது. உரம் மானியத்தை குறைக்க கூடாது என்பது உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி திருச்சி மண்டல பிஎஸ்என்எல் அலுவலகம் முன்பு காங்கிரசார் இன்று தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி மாநில பொதுச் செயலாளர் வக்கீல் சரவணன் தலைமையில் சிலிண்டருக்கு மாலை அணிவித்து போராட்டத்தில் ஈடுபட்டனர்.
தேசிய சோசியல் மீடியா ஒருங்கிணைப்பாளர் அப்துல் ரஹீம் பஜார் மைதீன் முன்னிலை வகித்தார் மாநில பொதுக்குழு உறுப்பினர் கவுன்சிலர் ரெக்ஸ், வக்கீல் மோகனா நிர்வாகிகள் முரளி, ஜி.எம்.ஜி மகேந்திரன், மலைக்கோட்டை கோட்டம் வெங்கடேஷ் காந்தி இளைஞர் காங்கிரஸ் மணிவேல் அண்ணாதுரை ,வழக்கறிஞர் கிருபாகரன் உள்பட ஏராளமானோர் கலந்து கொண்டனர். அப்போது அவர்கள் சிலிண்டருக்கு மாலை அணிவித்து மத்திய அரசை கண்டித்து கோஷம் எழுப்பியதால் பரபரப்பு ஏற்பட்டது. நிகழ்ச்சிக்கான ஏற்பாட்டினை மெக்கானிக்சோசியல் மீடியா மாநில தலைவர் அபுதாஹிர் மற்றும் செந்தில்குமார் ஜானி பசீர் அகமது யூசப் நிர்வாகிகள் செய்திருந்தனர்.