சர்வதேச பெண் குழந்தைகள் தினத்தை யொட்டி ரோட்டரி மாவட்டம் 3000, கல்வியாளர்கள் சங்கமம், அன்பில் அறக்கட்டளை இணைந்து தனித்திரு அறிவால், ஆற்றலால் மாணவியரை கொண்டாடும் நிகழ்ச்சி திருச்சி காட்டூர் மான் போர்டு பள்ளியில் இன்று நடந்தது. ரோட்டரி மாவட்டம் 3000 மாவட்ட ஆளுனர் ஆனந்த ஜோதி தலைமை தாங்கினர். முதன்மைக் கல்வி அலுவலர் சிவக்குமார், ஜோசப் கண் மருத்துவ மனை இயக்குனர் பிரதீபா, மான்போர்டு பள்ளி முதல்வர் மற்றும் தாளாளர் ராபர்ட் லூர்துசாமி ஆகியோர் முன்னிலை வகித்தனர். திருச்சிராப்பள்ளி பட்டர்பிளை ரோட்டரி கிளப் தலைவர் சுபா பிரபு வரவேற்றுப் பேசினார். சிறப்பு அழைப்பாளராக பள்ளி கல்வித் துறை அமைச்சர் அன்பில் மகேஸ் பொய்யா மொழி பரிசுகள் வழங்கி பாராட்டி பேசினார்.

ஆசிரியர் மனசு திட்ட ஒருங்கிணைப்பாளர் சிகரம் சதீஷ்குமார், தொடக்க உரை நிகழ்த்தினார். ரோட்டரி ரிளே சேர்மன் அபுதாலிப், மகப்பேறு மருத்துவர் பத்மபிரியா ஆகியோர் வாழ்த்துரை வழங்கினார்கள்.இந்நிகழ்வில் மாநகரக் கழகச் செயலாளர் மதிவாணன் மற்றும் மாவட்டத் துணைச் செயலாளர் செங்குட்டுவன் ஆகியோர் கலந்து கொண்டனர் பட்டர்பிளை ரோட்டரி கிளப் செயலாளர் பராசக்தி நன்றி கூறினார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

தற்போதைய செய்திகள்