சமூக வலைதளமான யூடியூபில் முக்குலத்தோர் சமூகத்தினையும், பசும்பொன் முத்துராமலிங்க தேவர் ஜெயந்தி விழாவையும் அவமானப்படுத்தும் விதமாகவும், முக்குலத்தோர் சமூகத்தைச் சேர்ந்த இளைஞர்கள் எந்த வேலைக்கு செல்லாமல் குடிபோதையில் இருப்பதாகவும், குற்ற பின்னணி உடையவர்களான அந்த சமூகத்தைச் சேர்ந்த இளைஞர்களை எந்த ஒரு நிறுவனமும் வேலைக்கு சேர்க்க மறுப்பதாகவும்,

தேவர் ஜெயந்தியில் பெண்களுக்கு பாதுகாப்பு இல்லை என்று சாதி கலவரத்தை தூண்டும் விதத்தில் இழிவான கருத்துக்களை பேசிய சவுக்கு சங்கர் தனது யூடியூப் சேனலில் வெளியிட்டு இருப்பது முக்குலத்தோர் சமூகத்தைச் சேர்ந்தவர்களுக்கு மிகுந்த மன வருத்தத்தை ஏற்படுத்தி உள்ளதாகவும் சவுக்கு சங்கர் மீதும், சவுக்கு யூடியூப் சேனல் மீதும் நடவடிக்கை எடுக்க வலியுறுத்தி பாரதிய ஜனதா கட்சி ஓபிசி சார்பில், மாநில பொதுச் செயலாளர் திருச்சி சூர்யா திருச்சி மாவட்ட காவல்துறை கண்காணிப்பாளரிடம் புகார் அளித்தார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

தற்போதைய செய்திகள்