திருச்சி பொன்மலை மேல அம்பிகாபுரம் பகுதியில் உள்ள டாஸ்மாக் கடை அருகே உள்ள கழிவுநீர் கால்வாயில் வாலிபர் ஒருவர் இறந்த நிலையில் கிடப்பதாக அப்பகுதியை சேர்ந்த பொதுமக்கள் திருச்சி பொன்மலை காவல் நிலையத்திற்கு தகவல் கொடுத்தனர் தகவலின் அடிப்படையில் சம்பவ இடம் வந்த போலீசார் விசாரணை மேற்கொண்டனர்.

விசாரணையில் திருச்சி பொன்மலை மிலிட்டரி காலனி பகுதியை சேர்ந்த லோகநாதன் என்பதும் குடிப்பழக்கத்திற்கு அடிமையான இவர் வேலைக்கு ஏதும் செல்லாமல் இருந்து வந்தது தெரிய வந்தது.

இதனால் போதையில் இந்த சாக்கடையில் தவறி விழுந்தாரா? அல்லது வேறு ஏதேனும் பிரச்சினையா? என்ற கோணத்தில் போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். ‌ மேலும் வாலிபரின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக திருச்சி அரசு தலைமை மருத்துவமனைக்கு போலீசார் அனுப்பி வைத்தனர். மேலும் இது குறித்து போலீசார் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

தற்போதைய செய்திகள்