தமிழ்நாடு முத்தரையர் சங்கத்தின் மாநிலத் தலைவர் அம்பலத்தரசு தலைமையில் கண்டன ஆர்ப்பாட்டம் திருச்சி சிந்தாமணி அண்ணா சிலை அருகில் நடைபெற்றது. இந்த ஆர்ப்பாட்டத்தில் சமூக நீதிக்கான அரசு என கூறும் தமிழக அரசு உடனடியாக சாதிவாரி கணக்கெடுப்பை நடத்த வேண்டும், முத்தரையர், முத்துராஜா ஆகிய பிரிவினரை மிகவும் பிற்படுத்தப்பட்டுள்ள பட்டியலில் சேர்க்க வேண்டும், முத்தரையர் 29பிரிவுகளை உள்ளடக்கிய ஒரே தொகுப்பாக உள் ஒதுக்கீடு வழங்கப்பட வேண்டும்,

திருச்சி மத்திய பேருந்து நிலையம் அருகில் கட்டப்பட்டுள்ள பெரும்பிடுகு முத்தரையர் மணி மண்டபத்தை உடனடியாக திறக்கப்பட வேண்டும் உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி 100க்கு மேற்பட்டோர் கலந்து கொண்டு கோஷமிட்டனர். இந்த ஆர்ப்பாட்டத்தில் மாநில பொதுச் செயலாளர் வழக்கறிஞர் குப்புசாமி, மாநில பொருளாளர் சுப்ரமணி மற்றும் திருச்சி மாவட்ட செயலாளர் ராஜேந்திரன் உட்பட பலர் கலந்து கொண்டனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *