திருச்சி மாநகராட்சி மாமன்ற கூட்டம் மேயர் அன்பழகன் தலைமையில், மாநகராட்சி ஆணையர் வைத்திநாதன், துணை மேயர் திவ்யா ஆகியோர் முன்னிலையில் இன்று நடைபெற்றது. இக்கூட்டத்தில் நகரப்பொறியாளர் சிவபாதம், மண்டலத் தலைவர்கள் மதிவாணன், ஆண்டாள் ராம்குமார், ததுர்காதேவி ,ஜெய நிர்மலா. விஜயலட்சுமி கண்ணன்,மற்றும் மாமன்ற உறுப்பினர்கள் மாநகராட்சி துணை ஆணையர், செயற்பொறியாளர்கள் , உதவி ஆணையர்கள் , உதவி செயற்பொறியாளார்கள், சுகாதார அலுவலர்கள் கலந்து கொண்டார்கள்.

அதனைத் தொடர்ந்து கூட்டத்தில் நடந்த விவாதத்தில் கவுன்சிலர் முத்து செல்வம் பேசுகையில் திருச்சி மாநகரில் மாடுகளை பிடிப்பதற்கு கொடுக்கப்பட்ட டெண்டரை உடனடியாக ரத்து செய்ய வேண்டும் என கோரிக்கை வைத்தார். அதற்கு மேயர் அன்பழகன் பேசுகையில் திருச்சி மாநகரில் மாடுகளை பிடிப்பதற்காக விடப்பட்ட டெண்டர் ரத்து செய்யப்பட்டுள்ளது என தெரிவித்தார். மேலும் திருச்சி மாநகராட்சியில் 11 நகர்ப்புற சுகாதார நிலையங்களை விரைவில் திறக்க நடவடிக்கை எடுத்து வருகிறோம் என தெரிவித்தார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

தற்போதைய செய்திகள்