புதுச்சேரியில் சிறுமி ஒருவரை பாலியல் வல்லுறவுக்கு ஆளாக்கி கொடூரமான முறையில் கொன்ற காம கொடூரன்களுக்கு கடுமையான தண்டனை வழங்கக் கோரி திருச்சியில் மக்கள் கலை இலக்கியக் கழகம் மற்றும் புதிய ஜனநாயகத் தொழிலாளர் முன்னணி தலைமையில் மத்திய பேருந்து நிலையம் அருகே உள்ள தந்தை பெரியார் சிலை முன்பு கண்டன ஆர்ப்பாட்டம் இன்று நடைபெற்றது.

இந்த கண்டன ஆர்ப்பாட்டத்திற்கு ம.க.இ.க மாவட்ட செயலாளர் ஜீவா தலைமை தாங்கினார். மையக் கலைக்குழு பொறுப்பாளர் லதா, மக்கள் உரிமை பாதுகாப்பு மையம் வழக்கறிஞர் ஆதி, புதிய ஜனநாயகத் தொழிலாளர் முன்னணியின் மாவட்ட இணைச் செயலாளர் மணலிதாஸ், ம.க.இ.க மாநில பொதுச் செயலாளர் கோவன் ஆகியோர் கண்டன உரையாற்றினர். சிறுமியை கொன்ற கொலைகாரர்களுக்கு கடுமையான தண்டனை வழங்கக் கோரியும், மோடி அரசை கண்டித்தும் கண்டன முழக்கங்கள் எழுப்பப்பட்டன.

 புதிய ஜனநாயகத் தொழிலாளர் முன்னணியின் மாவட்ட தலைவர் பழனிச்சாமி, ஆட்டோ ஓட்டுனர் பாதுகாப்பு சங்கத்தின் மாவட்ட தலைவர் சிவா ஆகியோர் தலைமை வகித்தனர். ம.க.இ.க, பு.ஜ.தொ.மு வின் அனைத்து தரைக்கடை வியாபாரிகள் பாதுகாப்பு சங்கம், ஆட்டோ ஓட்டுனர் பாதுகாப்பு சங்கம், சுமைப்பணி தொழிலாளர்கள் பாதுகாப்பு சங்கம், மக்கள் அதிகாரம், மக்கள் உரிமை பாதுகாப்பு மைய வழக்கறிஞர்கள் என தோழர்கள், பெண்கள் குழந்தைகள் என அனைவரும் திரளாக பங்கேற்றனர்.இறுதியாக ம.க.இ.க மாவட்ட பொருளாளர் சரவணன் ஆர்ப்பாட்டத்தில் கலந்து கொண்ட அனைவருக்கும் நன்றி கூறி கூட்டத்தை முடித்து வைத்தார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

தற்போதைய செய்திகள்