இந்திய ஜனநாயக வாலிபர் சங்கத்தின் சார்பில், திருச்சி தலைமை தபால் நிலையம் அருகில், மாவட்ட தலைவர் லெனின் தலைமையில் 50 க்கும் மேற்பட்டோர் கண்டன ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். ஆர்ப்பாட்டத்தின் போது, உள்துறை அமைச்சகத்தின் மூலம் சிஆர்பிஎப் (CRPF) காவலர் தேர்வில் இந்தியா முழுவதும் 9212 பணி இடங்களுக்கான தேர்வு நடைபெற உள்ளது.

இதில் தமிழகத்தில் 12 மையங்களில் 579 காலி பணியிடங்களுக்கான தேர்வு நடைபெற உள்ளது. தமிழக தேர்வர்களுக்கும் ஹிந்தி மற்றும் ஆங்கிலத்தில் மட்டுமே தேர்வு நடைபெறும் என மத்திய அரசு அறிவித்துள்ளது.

இதன் காரணமாக, தமிழகத்தில் உள்ள மாணவர்களுக்கு வேலை பறிபோகும் நிலை உள்ளது. எனவே உடனடியாக மத்திய அரசு தமிழில் தேர்வு எழுத நடவடிக்கை எடுக்க வேண்டும்,இல்லையென்றால் தமிழகத்தில் தேர்வு எழுதும் மையங்களை முற்றுகையீட்டு ஆர்ப்பாட்டத்தில் ஈடுபடுவோம் என தெரிவித்தனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

தற்போதைய செய்திகள்