இந்தியாவின் 78வது சுதந்திர தின விழாவை முன்னிட்டு இந்தியா முழுவதும் உள்ள அரசு அலுவலகங்கள் பள்ளி கட்டிடங்கள் வணிக வளாகங்கள் பொது இடங்கள் உள்ளிட்ட பல்வேறு இடங்களில் மூவர்ண தேசிய கொடியை ஏற்றி வைத்து மரியாதை செலுத்தி நாம் பெற்ற சுதந்திரத்தை நினைவுகூர்ந்து வருகிறோம்.

அந்த வகையில் திருச்சி சுப்பிரமணியபுரம் பகுதியில் உள்ள நீர்வளத்துறை தலைமை பொறியாளர் அலுவலகத்தில் சுதந்திர தின விழாவை முன்னிட்டு மூவர்ண தேசிய கொடியை திருச்சி மண்டல தலைமை பொறியாளர் தயாளகுமார் ஏற்றி வைத்து மரியாதை செலுத்தினார். அருகில் கண்காணிப்பு பொறியாளர் சிவக்குமார் மற்றும் அதிகாரிகள் அலுவலர்கள் உள்ளிட்ட ஏராளமானோர் கலந்து கொண்டு மகாத்மா காந்தியின் திருவுருவ படத்திற்கு மலர் தூவி மரியாதை செலுத்தினர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

தற்போதைய செய்திகள்