இந்தியாவின் 78வது சுதந்திர தின விழாவை முன்னிட்டு இந்தியா முழுவதும் உள்ள அரசு அலுவலகங்கள் பள்ளி கட்டிடங்கள் வணிக வளாகங்கள் பொது இடங்கள் உள்ளிட்ட பல்வேறு இடங்களில் மூவர்ண தேசிய கொடியை ஏற்றி வைத்து மரியாதை செலுத்தி நாம் பெற்ற சுதந்திரத்தை நினைவுகூர்ந்து வருகிறோம்.

திருச்சி அரசு தலைமை மருத்துவமனை அருகே உள்ள திருச்சி மாநகராட்சி கோ அபிஷேகபுரம் மண்டலம் 5 வார்டு குழு அலுவலகத்தில் கோட்டத் தலைவர் விஜயலட்சுமி கண்ணன் கலந்து கொண்டு மூவர்ண தேசியக் கொடியை ஏற்றி வைத்து மரியாதை செலுத்தினார் அருகில் மாநகராட்சி உதவி ஆணையர் வெங்கட்ராமன் கவுன்சிலர்கள் சுரேஷ், பயாஸ் அகமது, விமலா ராணி, மற்றும் மாநகராட்சி அதிகாரிகள் ஊழியர்கள் உள்ளிட்ட ஏராளமானோர் கலந்து கொண்டனர் அதனைத் தொடர்ந்து பள்ளி மாணவ மாணவிகளுக்கு நலத்திட்ட உதவிகளை கோட்டத் தலைவர் விஜயலட்சுமி கண்ணன் வழங்கினார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

தற்போதைய செய்திகள்