திருச்சி மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் வாரம் தோறும் நடைபெறும் மக்கள் குறைத்தீர்க்கும் நாள் கூட்டம் மாவட்ட ஆட்சித் தலைவர் பிரதீப் குமார் தலைமையில் இன்று நடைபெற்றது. இந்த கூட்டத்திற்கு திருச்சி மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளை சேர்ந்த பொதுமக்கள் தங்களின் கோரிக்கைகளை மனுக்களாக அளித்தனர்.

அதன் அடிப்படையில் இன்று காலை சமூகநீதி பேரவை சார்பில் தலைவர் ரவிக்குமார் மற்றும் சம்சுதீன் ஆகியோர் தலைமையில் மாவட்ட ஆட்சியர் பிரதீப் குமாரிடம் கோரிக்கை மனு அளிக்கப்பட்டது. அந்த மனுவில் திருச்சி மாநகராட்சி நூறு வார்டுகளாக மாற்றும் திட்டத்தில் சோமரசம் பேட்டை ஊராட்சியை மாநகராட்சி உடன் இணைப்பதற்கு மக்களுடைய கருத்தை கேட்காமல் முடிவெடுக்கக் கூடாது என்று அப்பகுதியை சேர்ந்த பொது மக்கள் சோமரசம் பேட்டை மாநகராட்சியுடன் இணைக்கும் திட்டத்திற்கு எதிர்ப்பு தெரிவித்து மாவட்ட ஆட்சி தலைவர் பிரதீப் குமாரிடம் கோரிக்கை மனுவை இன்று அளித்தனர்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

தற்போதைய செய்திகள்