திருச்சி மாநகர் மாவட்ட ஓ பன்னீர்செல்வம் அணி நிர்வாகிக ஆலோசனைக் கூட்டம் அவை தலைவர் வக்கீல் ராஜ்குமார் தலைமையில் நடைபெற்றது இதில் ஜெயலலிதா பேரவை மாவட்ட செயலாளர் வெள்ளமண்டி ஜவஹர்லால் நேரு முன்னிலை வகித்தார் கூட்டத்தில் மாவட்டச் செயலாளரும் முன்னாள் அமைச்சர் ஆன வெள்ளை மண்டி நடராஜன் ஆலோசனை வழங்கி பேசினார்.

இதில் திருச்சி காஜாமலையில் வருகிற பத்தாம் தேதி மாலை நாலு மணிக்கு ஒருங்கிணைந்த திருச்சி மாவட்ட நிர்வாகிகள் ஆலோசனைக் கூட்டம் நடைபெறுகிறது. இதில் கழக ஒருங்கிணைப்பாளர் முன்னாள் முதலமைச்சர் ஓ பன்னீர்செல்வம் கலந்து கொண்டு பேசுகிறார்.

கூட்டத்தில் இணை ஒருங்கிணைப்பாளர் வைத்தியலிங்கம் துணை ஒருங்கிணைப்பாளர்கள் மனோஜ் பாண்டியன் பிரபாகர் மற்றும் மாநில நிர்வாகிகள் பங்கேற்கின்றனர் கூட்டத்தில் பங்கேற்க திருச்சி மாநகருக்கு வருகை தரும் முன்னாள் முதலமைச்சர் ஓ பன்னீர் செல்வத்திற்கு நாம் அனைவரும் திரண்டு வந்து உற்சாக வரவேற்பு அளிக்க வேண்டும் என்று பேசினார் கூட்டத்தில் கழக நிர்வாகிகள் பலர் கலந்து கொண்டனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *