பசுமை பாரத மக்கள் கட்சியின் மாநில மாவட்ட நிர்வாகிகள் ஆலோசனைக் கூட்டம் திருச்சி அஜந்தா ஹோட்டலில் நடைபெற்றது இந்தக் கூட்டத்திற்கு பசுமை பாரத மக்கள் கட்சியின் நிறுவனத் தலைவர் பொதுச் செயலாளர் ஆறுமுகராஜ் ஆச்சாரியா தலைமை தாங்கினார். நிர்வாகிகள் சிவக்குமார், தமிழன், பாலா, அறிவழகன் முன்னிலை வகித்தனர். இந்த ஆலோசனைக் கூட்டத்திற்கு திருநெல்வேலி, செங்கல்பட்டு புதுக்கோட்டை உள்ளிட்ட பல்வேறு மாவட்டங்களில் இருந்து மாநில மண்டல நிர்வாகிகள் கலந்து கொண்டனர். அதனைத் தொடர்ந்து நிறுவனத் தலைவர் ஆறுமுகராஜ் ஆச்சாரியா அளித்த பேட்டியில் கூறியதாவது:-

உண்மையான சமூக நீதியும் அனைத்து சமுதாயத்திற்குமான சமூக நீதியை ஏற்படுத்திக் கொடுக்க வேண்டும் என்பதற்காக இந்த கட்சி துவங்கப்பட்டுள்ளது. உண்மையான சமூக நீதி எப்போது கிடைக்கும் என்றால் சாதிவாரியான கணக்கெடுப்பு நடத்தினால் உண்மையான சமூக நீதி அனைத்து சமுதாயத்திற்கும் கிடைக்கும் சாதிவாரியான கணக்கெடுப்பை வலியுறுத்தியும் மற்ற எல்லா சமுதாய அரசியல் பிரதிநிதித்துவம் கிடைக்க வேண்டும் என்பதற்காக பசுமை பாரத மக்கள் கட்சி துவங்கப்பட்டுள்ளது. இது ஒரு குறிப்பிட்ட சமுதாயத்திற்கான கட்சி அல்ல இந்த கட்சியில் எல்லா சமுதாயத்தினுடைய நிர்வாகிகளும் உள்ளனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *