திருச்சி மாவட்டத்தில் பஞ்சப்பூர் ஸ்ரீரங்கம் மற்றும் ஏர்போர்ட் பகுதிகளில் ஜி ஸ்கொயர் நிறுவனத்தின் சார்பில் இப்பகுதிகளில் உடனடியாக வீடு கட்டி குடியேற வில்லா வீட்டு மனைகளை குளோபல் பிசினஸ் தலைவர் சிவக்குமார் மற்றும் ஜி ஸ்கொயர் நிறுவனத்தின் மண்டல தலைவர் வேல்முருகன் ஆகியோர் அறிமுகம் செய்து வைத்தனர் மேலும் இது குறித்து கூறுகையில் :-திருச்சியில் இந்தியாவின் முன்னனி நிறுவனமான ஜி. ஸ்கொயர் நிறுவனம் வில்லா வீட்டு மனைகள் எந்த எந்த பகுதியில் உள்ளது. தாங்கள் நிறுவனம் விற்பனை செய்யும் வீட்டு மனைகள் விலை மற்ற நிறுவனங்கள் விற்கும் விலையை விட எங்களிடம் விலை நியாயமாக விற்பனை செய்கிறோம் என தெரிவித்தார். இவர்கள் விற்பனை செய்யும் வீட்டு மனை அளவு 600 சதுர அடியிலிருந்து ஏறத்தாழ 2600 சதுர அடி வரை விற்பனைக்கு உள்ளது என்றும் ஓராண்டு இலவச இட பராமரிப்பு சேவையும் 24 மணி நேரமும் சிசிடிவி கண்காணிப்பும் மேலும் 15 முதல் 40க்கும் மேற்பட்ட உலக தர வசதிகள் முறையான ஆவணங்கள் மற்றும் டி டி சி பி ஒப்புதல் அனைத்தும் முறையாக ஆவணங்கள் சரிபார்க்கப்பட்டு வீட்டுமனைகள் தருவதால் வாங்கும் மக்களுக்கு எந்த விதமான சட்ட இடையூறுகள் இல்லாமல் வங்கி கடன் வசதி பெற ஏதுவாக உள்ளதாகவும் ,
வாங்கிய மனைகள் வருடத்திற்கு வருடம் விலை ஏற்றம் உள்ளதாகவும் இருப்பதாக தெரிவித்தார் . மேலும் ஐந்து ஆண்டுகள் வரை பராமரிப்பு உதவியும் வழங்கப்படுவதாகவும் கூறினார் . மேலும் அவர் கூறுகையில் திருச்சி வேகமாக வளர்ந்து வருகிறது எப்போதும் இல்லாத அளவுக்கு குடியிருப்பு தேவை என்பது இங்கு அதிகரித்துள்ளது . மேலும் நீண்ட காலம் மதிப்புள்ள நிலையான பாதுகாப்பான சமூகங்களை உருவாக்குவதற்கும் பங்களிக்கும் என்றும் தெரிவித்தார் . ஜி. ஸ்கொயர் நிறுவனம் விற்பனை செய்யும் இடங்கள் திருச்சி பஞ்சப்பூர் ஸ்ரீரங்கம் திருச்சி விமான நிலையம் திருநகர் பகுதியிலும் ஜிஸ்கொயர் நிறுவனத்தின் வீட்டு மனைகள் விற்பனைக்கு உள்ளது என தெரிவித்தார்.
இந்நிறுவனத்தின் நிர்வாக இயக்குனர் பால ராமஜெயம் கூறுகையில்: இந்தத் திட்டங்களுக்கான மொத்த வளர்ச்சி மதிப்பு ரூபாய் 300 கோடி என்றும் தெரிவித்தார் . சென்னையில் இந்நிறுவனத்திற்கு கிடைத்த வெற்றியை தொடர்ந்து திருச்சியிலும் தனது வீட்டு மனைகள் திட்டத்தை ஜி ஸ்கொயர் நிறுவனம் விரிவுபடுத்தி உள்ளதாகவும் தெரிவித்தார் .