திருச்சியில் 4 நாட்கள் நடைபெறும் ஜூனியர் பேட்மிட்டன் சீசன் 2, போட்டிகள் நேற்று தொடங்கியது. இந்த நிகழ்வில் இந்தியா பேட்மிட்டன் சங்கத்தின் துணைத் தலைவரும் தமிழ்நாட்டின் பேட்மிட்டன் தலைவரும் ஆன அன்புமணி ராமதாஸ் போட்டியை தொடங்கி வைத்தார். மேலும் இந்நிகழ்வில் செயலாளரும் தமிழ்நாடு பேட்மிண்டன் சங்கத்தின் செயலாளர் அருணாச்சலம் மற்றும் பலர் கலந்து கொண்டனர். திருச்சி ஜமால் முகமது கல்லூரியில் உள்ள உள் விளையாட்டு அரங்கில் ஜூனியர் பேட்மிட்டன் சீசன் 2 போட்டிகள் நேற்று தொடங்கியது. மேலும் இறுதி போட்டியானது வரும் 15 ஆம் தேதி நடைபெற உள்ளது.

இந்த சீசன் 2 , வில் 8 அணிகள் , 88 வீரர், வீராங்கனைகள் பங்கேற்கின்றனர். 8 அணிகளை 2 அணிகளாக பிரித்து போட்டிகள் நடத்தப்பட்டு வருகிறது. தினம்தோறும் காலை, மாலை என போட்டிகள் தொடர்ந்து நடைபெற உள்ளது.இந்த போட்டியானது 17,19 வயதுக்கு உட்பட்ட பெண்கள், 19 வயதுக்கு உட்பட்ட ஆண்கள் மற்றும் இரு பிரிவினரும் இணைந்து விளையாடும் போட்டிகள் நடைபெறுகிறது.

இதில் வெற்றி பெறும் அணிகளின் வீரர்,வீராங்கனைகளுக்கரூபாய் 70 லட்சம் பணமதிப்புள்ள பரிசுகளை வழங்கபட உள்ளது. குறிப்பாக 15ஆம் தேதி மாலை போட்டியின் நிறைவு விழாவில் நடிகர் மற்றும் இசை அமைப்பாளர் ஜி.வி. பிரகாஷ் கலந்து கொண்டு பரிசுகளை வழங்க உள்ளார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *