திருச்சி ஜெயில் கார்னரில் இருந்து பொன்மலைப்பட்டி செல்லும் சாலையில் உள்ள வாய்க்காலில் தண்ணீர் தேங்கி இருப்பதாக வரப்பெற்ற தகவலைத் தொடர்ந்து, நகராட்சி நிர்வாகத் துறை அமைச்சர் கே. என். நேரு அவர்களின் உத்தரவின்படி, இந்த வாய்க்காலில் உள்ள கழிவுகளை ஜேசிபி மூலம் உடனடியாக அகற்றி சுத்தம் செய்திட திருச்சி மாநகராட்சி மேயர் அன்பழகன் உடனடி நடவடிக்கை மேற்கொண்டார்.

இதனைத் தொடர்ந்து, மாவட்ட ஆட்சித்தலைவர் பிரதீப் குமார் மாநகராட்சி ஆணையர் டாக்டர்.வைத்திநாதன் ஆகியோர் இவ்விடத்தில் வாய்க்காலில் உள்ள கழிவுகளை ஜேசிபி இயந்திரம் மூலம் அகற்றி முழுமையாக சுத்தம் செய்யும் பணி நடைபெறுவதை இன்று காலை பார்வையிட்டு இப்பணியினை சிறப்பாக மேற்கொள்ளவும், இப்பகுதியினை சுத்தமாக வைத்து, சுகாதாரத்தினை மேம்படுத்திடவும் அலுவலர்களுக்கு அறிவுறுத்தினர்கள்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

தற்போதைய செய்திகள்