திருச்சி மாவட்டம் தாராநல்லூர், வீரமாநகரம் புதுத்தெரு பகுதியில் உள்ள அருள்மிகு ஜெய ஜெய ஸ்ரீ செல்வ முத்து மாரியம்மன் திருக்கோவில் கும்பாபிஷேக விழா இன்று காலை நடைபெற்றது. முன்னதாக இந்த மகா கும்பாபிஷேக விழாவிற்காக திருச்சி காவேரி ஆறு அம்மா மண்டபம் படித்துறையில் இருந்து புனித நீர் தீர்த்த குடம் மூலம் கொண்டுவரப்பட்டு.

 கடந்த 19 ஆம் தேதி முதலாம் யாகசாலை பூஜையும், 20 ஆம் தேதி இரண்டாம் யாக சாலை பூஜையும், நேற்றைய தினம் மூன்றாம் யாகசாலை பூஜையும் நடைபெற்றது. தொடர்ந்து இன்று காலை 6 மணிக்கு மேல் சிறப்பு பூஜைகள் செய்யப்பட்டு, மேளதாளம் முழங்க யாகசாலையிலிருந்து புனித நீர் அடங்கிய கலசங்கள் புறப்பாடாகி, காலை 10 மணி அளவில் கோபுர கலசத்தில் புனித நீர் ஊற்றி கும்பாபிஷேகம் நடைபெற்றது.

இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர். விழாவையொட்டி தமிழ்நாடு சோழிய வேளாளர் சங்கம் சார்பில், டாக்டர் செந்தில் பிள்ளை தலைமையில் பக்தர்களுக்கு அன்னதானம் வழங்கப்பட்டது. இந்த கும்பாபிஷேக விழாவில் திருச்சி மாநகராட்சி 14 வது வார்டு மாமன்ற உறுப்பினர் அரவிந்தன் கலந்து கொண்டு சுவாமி தரிசனம் செய்தார். விழாவிற்கான ஏற்பாடுகளை கோவில் நிர்வாகத்தினர் செய்திருந்தனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *