திருச்சி அரிஸ்டோ ரவுண்டானா பகுதியில் உள்ள டாக்டர் அம்பேத்கரின் 67 வது நினைவு தினத்தை முன்னிட்டு அவரது முழு உருவ சிலைக்கு இன்று காலை திருச்சி மாநகர் மாவட்ட தேமுதிக சார்பில் மாநகர செயலாளர் டிவி கணேஷ் தலைமையில் தேமுதிகவினர் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர்.

இந்நிகழ்ச்சியில் மாநில தொண்டரணி துணை செயலாளர் சாகுல் ஹமீது, மாநில மாற்றுத்திறனாளிகள் அணி துணை செயலாளர் வாஞ்சி குமாரவேல், மாநில அமைப்புசாரா தொழிற்சங்க செயலாளர் திருப்பதி, அவைத்தலைவர் ஜெயராமன் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.

இதேபோல் சட்ட மாமேதை டாக்டர் அம்பேத்கர் அவர்களின் 67வது நினைவு தினத்தை யொட்டி இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் திருச்சி மாநகர் மாவட்ட குழுவின் சார்பில் திருச்சி அரிஸ்டோ ரவுண்டானா அருகில் உள்ள டாக்டர் அம்பேத்கரின் சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தப்பட்டது.

நிகழ்ச்சியில் AITUCமாவட்ட பொதுச் செயலாளர் சுரேஷ், CPI மாவட்ட செயலாளர் சிவா,மாவட்டத் துணைச் செயலாளர் செல்வகுமார், பொருளாளர் சொக்கி. லட்சுமி இளைஞர் பெருமன்ற மாவட்ட தலைவர் முருகேசன் உள்ளிட்ட 40க்கும் மேற்பட்டோர் கலந்து கலந்துகொண்டனர்.

 அண்ணல் டாக்டர் அம்பேத்கர் அவர்களின் 67 ஆம் ஆண்டு நினைவு தினத்தை முன்னிட்டு திருச்சி மத்திய பேருந்து நிலையம் அரிஸ்டோ ஓட்டல் பாலம் அருகில் உள்ள அண்ணலின் உருவச்சிலைக்கு மக்கள் கலை இலக்கியக் கழகம், புதிய ஜனநாயகத் தொழிலாளர் முன்னணி தலைமையில் மாலை அணிவித்து வீரவணக்கம் செலுத்தப்பட்டது .

இந்நிகழ்வினை மக்கள் கலை இலக்கியக் கழகத்தின் மாநில பொதுச் செயலாளர் கோவன் மற்றும் புதிய ஜனநாயகத் தொழிலாளர் முன்னணி மாவட்ட செயலாளர் ஜீவா தலைமை ஏற்று நடத்தினர். இந்நிகழ்வில் மக்கள் கலை இலக்கியக் கழகம், புதிய ஜனநாயகத் தொழிலாளர் முன்னணியின் ஆட்டோ ஓட்டுனர் பாதுகாப்புச் சங்கம், சுமைப்பணி தொழிலாளர் பாதுகாப்பு சங்கம், மக்கள் அதிகாரம் ஆகிய அமைப்புகளின் நிர்வாகிகள் தோழர்கள் திரளாக பங்கேற்றனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *