திருச்சி மாவட்டம் ஆதிதிராவிடர் நலத்துறையின் மூலம் 2023-2024ம் ஆண்டிற்கு டாக்டர் அம்பேத்கர் அவர்களின் பெயரில் “டாக்டர் அம்பேத்கர் தமிழக அரசு விருது” ஆதிதிராவிடர் நல மக்களின் முன்னேற்றத்திற்கும், அரிய தொண்டு செய்பவர்களுக்கும், தமிழ் வளர்ச்சிக்கு பாடுப்பட்ட தமிழறிஞர்கள். கவிஞர்கள், சான்றோர் ஆகியோர்களில் சிறந்தோர்க்கும் திருவள்ளுவர் திருநாளில் “டாக்டர் அம்பேத்கர் தமிழக அரசு விருது” ஆண்டு தோறும் வழங்கப்பட்டு வருகிறது.

2023-ம் ஆண்டிற்கான டாக்டர் அம்பேத்கர் தமிழக அரசு விருது 2024ஆம் ஆண்டில் திருவள்ளுவர் திருநாளன்று வழங்கப்பட இருப்பதால் 2023-2024ஆம் ஆண்டிற்கான “டாக்டர் அம்பேத்கர் தமிழக அரசு விருது பெற விண்ணப்பிக்க விரும்பும் நபர்கள் அதற்கான உரிய படிவத்தினை திருச்சிராப்பள்ளி மாவட்டத்தில் ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் நல அலுவலகத்தை அணுகி பெற்று கொள்ளுமாறும் பெறப்பட்ட விண்ணப்பங்களை பூர்த்தி செய்து உரிய முன்மொழிவுகளை 05.11.2023-க்குள் பழங்குடியினர் மாவட்ட ஆதிதிராவிடர் மற்றும் நல் அலுவலகத்தில் ஒப்படைக்க கேட்டுக்கொள்ளப்படுகிறது. இந்த தகவலை திருச்சிராப்பள்ளி மாவட்ட ஆட்சித்தலைவர் பிரதீப் குமார் தெரிவித்துள்ளார். .

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

தற்போதைய செய்திகள்