முத்தமிழறிஞர் டாக்டர் கலைஞரின் நூற்றாண்டு விழாவை முன்னிட்டு திமுக சட்டத்துறை சார்பில் சட்டக் கல்லூரி மாணவர்கள் மற்றும் மூன்று ஆண்டுகளுக்கு உட்பட்ட இளம் வழக்கறிஞர்கள் கலந்து கொள்ளும் பேச்சுப்போட்டி திருச்சி அரசு சட்டக் கல்லூரியில் இன்று நடைபெற்றது..இந்த பேச்சு போட்டியில் திருச்சி மண்டலம் சார்பில் திருச்சி புதுக்கோட்டை, தஞ்சாவூர் உள்ளிட்ட மூன்று மாவட்டங்களில் இருந்து சட்டக் கல்லூரி மாணவ,மாணவிகள் 32 பேர் கலந்து கொண்டு கலைஞரின் பார்வையில் சமூக நீதி, கலைஞரின் பார்வையில் மாநில சுயாட்சி என்ற தலைப்பில் சட்டக் கல்லூரி மாணவர்கள், வழக்கறிஞர்கள் பேசினர்..

இந்த போட்டியின் முடிவில் வெற்றி பெறுபவர்களுக்கு முதல் பரிசு ரூ.50,000 தங்கப் பதக்கமும், இரண்டாம் பரிசு ரூ.25,000 வெள்ளிப் பதக்கமும், மூன்றாம் பரிசு ரூ.15,000 தாமிர பதக்கமும், ஆறுதல் பரிசு 5 ஆயிரம் வெண்கல பதக்கமும் மற்றும் சான்றிதழ்களும் வழங்கப்பட்டது. இந்த போட்டியில் வெற்றி பெற்ற மாணவர்கள், இளம் வழக்கறிஞர்கள் சென்னையில் நடைபெறும் மாநில அளவிலான இறுதிப் போட்டியில் கலந்து கொள்வார்கள்.இந்த பேச்சு போட்டியில் சிறப்பு அழைப்பாளராக மாநிலங்களவை உறுப்பினர் என்.ஆர் இளங்கோ ,திருச்சி மத்திய மாவட்ட அமைப்பாளர் வழக்கறிஞர் ஓம் பிரகாஷ், துணை அமைப்பாளர் ஷீலா, தெற்கு மாவட்ட அமைப்பாளர் தினகரன் மற்றும் வழக்கறிஞர்கள் கலந்து கொண்டனர்..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *