திருச்சி தென்னூர் பகுதியில் உள்ள தமிழ்நாடு மின்வாரிய திருச்சி மண்டல அலுவலகத்தில் உள்ள தலைமை பொறியாளரிடம் தமிழ் மாநில காங்கிரஸ் கமிட்டி திருச்சி மாவட்ட விவசாய அணி தலைவர் புங்கனூர் செல்வம் தலைமையில் விவசாயி ராஜேந்திரன் உள்ளிட்ட விவசாயிகள் கோரிக்கை மனு அளித்தனர் அந்த கோரிக்கை மனுவில் கூறியிருப்பதாவது:- திருச்சி மாவட்டம் வியாழன்மேடு, கீழப்பட்டி, போசம்பட்டி, புலியூர், குழுமணி, கோப்பு, நெய்தலுார் காலனி, போதாவூர், தாயனூர், பள்ளக்காடு கிராமங்களில்
800 ஏக்கர் -க்கும் மேற்பட்ட நிலங்களில் மலர் நெல்சாகுபடி செய்யப்பட்டு மின் விநியோகம் இல்லாமல் தண்ணீர் இன்றி கருகும் நிலையில் உள்ளது. மேற்படி கீழப்பட்டி சாலையில் போசம்பட்டி கிராமத்திற்குட்பட்ட டிரான்பார்மர் பழுது அடைந்து மின் விநியோகம் இல்லாமல் கடந்த 10 நாட்களுக்கு மேல் உள்ளது. இதுசம்மந்தமாக பலமுறை புகார் கொடுத்தும் இதுநாள் வரை எந்த நடவடிக்கையும் இல்லை. ஆதலால் தாங்கள் உடனடியாக நடவடிக்கை எடுத்து விவசாய பயிர்களையும், விவசாயிகளையும் காப்பாற்ற கோரி மனு அளித்தனர்.