திருச்சி பீம நகர் பகுதியில் சார்ந்த நாகராஜ் என்ற 65 வயதான முதியவர் தனது காரில் நீதிமன்றம் ஹீபர் ரோடு சாலை வழியாக சென்று கொண்டிருந்தார். அப்பொழுது அவரது கட்டுப்பாட்டை இழந்த கார் இருசக்கர வாகனத்தில் மோதியது தொடர்ந்து அவ்வழியாக சென்ற பெண் மாற்றும் சிறுமி மீது மோதி அங்கே இருந்த டீக்கடை உள்ளே பாய்ந்தது

இதனை கண்ட அக்கம் பக்கத்தினர் காயம் அடைந்தவர்களை மீட்டு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர் மேலும் கார் ஓட்டி வந்த முதியவர் சிறு காயங்களுடன் உயிர்த்தப்பினார். இது பற்றிய தகவல் அறிந்த போலீசார் சம்பவ இடத்திற்கு வந்து வழக்கு பதிவு விசாரணை நடத்தி வருகின்றனர். இன்று பொங்கல் காரணமாக டீக்கடை விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது இதன் காரணமாக பெரும் விபத்து தவிர்க்கப்பட்டது. பரபரப்பாக காணப்படும் ஹீபர் சாலையில் நடந்த இவ்விபத்து அப்பகுதியில் பரபரப்பு ஏற்படுத்தியது

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

தற்போதைய செய்திகள்