உச்சநீதிமன்ற உத்தரவின்படி கர்நாடகா அரசு தமிழகத்திற்கு மாதாமாதம் திறக்கவேண்டிய தண்ணீரை திறக்க மறுப்பதால், கர்நாடகா அரசிடம் இருந்து உச்ச நீதிமன்றம் 1 இலட்சம் கோடி இழப்பீடு பெற்று தமிழக விவசாயிகளுக்கு வழங்க வேண்டும் எனவும், காவிரி- கோதாவரி இணைப்பு திட்டத்தை நிறைவேற்றக் கோரியும், மத்திய அரசு கொண்டு வந்த மூன்று குற்றவியல் சட்ட திருத்தத்தை திரும்ப பெற கோரி நடைபெறும் வழக்கறிஞர் போராட்டத்திற்கு ஆதரவு தெரிவித்தும் தேசிய தென்னிந்திய நதிகள் இணைப்பு விவசாயிகள் சங்கத்தினர் 100 க்கும் மேற்பட்டோர், மாநில தலைவர் அய்யாகண்ணு தலைமையில் தலைநகர் டெல்லியில் போராட்டம் நடத்துவதற்காக ரயில் டிக்கெட் முன்பதிவு செய்து டெல்லி நோக்கி பயணம் மேற்கொண்டனர். இந்நிலையில் சென்னையில் இருந்து ரயில் மூலம் டெல்லி புறப்பட்டு சென்ற விவசாயிகளை, மத்திய பிரதேசத்தில் வைத்து மாநில காவல் துறையினர் தடுத்து அவர்களை கீழே இறக்கி, காவலில் வைத்து பின்னர் அங்கிருந்து தமிழ்நாட்டிற்கு திருப்பி அனுப்பி வைத்தனர்.

 இந்நிலையில் சுமார் ஒரு லட்சம் ரூபாய்க்கு மேல் பயணசீட்டு எடுத்தும் பயணம் செய்யவிடாமல் தடுத்தததால் ஏற்பட்ட இழப்பினை வலியுறுத்தி தேசிய தென்னிந்திய நதிகள் இணைப்பு விவசாயிகள் சங்க தலைவர் அய்யாக்கண்ணு தலைமையிலான 100-க்கும் மேற்பட்ட விவசாயிகள் இன்று குருவாயூர் எக்ஸ்பிரஸ் மூலமாக திருச்சி ரயில் நிலையம் வந்து இறங்கி, அங்கிருக்கும் ரயில்வே டி.ஆர்.எம் அலுவலகத்திற்கு சென்று பயணத்தொகை முழுவதையும் திருப்பி கொடுக்க வலியுறுத்தி ரயில்வே கோட்ட மேலாளரிடம் முறையிட முயன்றனர் அவர்களை போலீசார் தடித்த நிறுத்தினர். தொடர்ந்து ரயில்வே கோட்ட மேலாளர் விவசாயிகளிடம் பேச்சுவார்த்தை நடத்தினார் இதில் பயணத் தொகையை திரும்ப கொடுப்பதாக உறுதி அளித்ததை தொடர்ந்து விவசாயிகள் போராட்டத்தை கைவிட்டு களைந்து சென்றனர். விவசாயிகள் திடீரென ரயில்வே கோட்ட மேலாளர் அலுவலகத்தை முற்றுகையிட்டதால் ரயில் நிலையத்தில் சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

தற்போதைய செய்திகள்