கடந்த 27, 28 ஆகிய தேதிகளில் அதிமுக பொதுச் செயலாளர், சட்ட மன்ற எதிர்க்கட்சி தலைவர் எடப்பாடி கே.பழனிச்சாமி, மதுரை, திருச்சி, தஞ்சை, கும்பகோணம் உள்ளிட்ட பகுதிகளில் நடைபெற்ற பல்வேறு நிகழ்ச்சிகளில் பங்கேற்றார். அதிமுக நிர்வாகிகள் இல்ல மணவிழா மற்றும் பல்வேறு நிகழ்ச்சிகளில் பங்கேற்ற பின், திருச்சியில் இருந்து விமானம் மூலம் சென்னை திரும்பினார்.

அவருக்கு திருச்சி மாநகர் மாவட்ட கழகம் சார்பில், திருச்சி மாநகர் மாவட்ட அதிமுக மாணவரணி மாவட்ட செயலாளர் இப்ராம்ஷா தலைமையில், அதிமுகவினர் உற்சாக வரவேற்பு அளித்தனர். அப்போது அவருக்கு புத்தகங்கள், பொன்னாடைகள் பரிசாக வழங்கப்பட்டது.

இந்த நிகழ்வில், திருச்சி மாவட்ட அவைத்தலைவர் மலைக்கோட்டை ஐயப்பன், ஏர்போர்ட் பகுதி கழக செயலாளர் ஏர்போர்ட் விஜி, மகளிர் அணியினர், மாணவர் அணியினர் உள்ளிட்ட அதிமுக நிர்வாகிகள் பலர் பங்கேற்றனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *