திருச்சி தனலட்சுமி சீனிவாசன் பல்கலைக்கழகம் மற்றும் சீனிவாசன் மருத்துவக் கல்லூரி இணைந்து நடத்திய புற்றுநோய் குறித்து விழிப்புணர்வு பேரணி இன்று நடைபெற்றது . இப்பரணியை திருச்சி மாநகர காவல் துறை ஆணையர் காமினி கொடி அசைத்து துவக்கி வைத்தார்.

இப்பேரணி திருச்சி ஜங்ஷன் ரயில் நிலையத்தில் துவங்கி தலைமை தபால் நிலையம்,ஆல் இந்தியா ரேடியோ, எம்ஜிஆர் சிலை வழியாக சென்று தலைமை மருத்துவமனையில் நிறைவடைந்தது.

 இப்பேரணியில் 500-க்கும் மேற்பட்ட மாணவ,மாணவிகள் கலந்து கொண்டு புற்று நோய்க்கு எதிரான விழிப்புணர்வு வாசகங்கள் அடங்கிய பதாகைகளை ஏந்தி சென்றனர். இப்பேரணியில் திருச்சி தலைமை மருத்துவர் நேரு, தனலட்சுமி சீனிவாசன் கல்லூரி மருத்துவர் பேச்சியம்மாள் மற்றும் காசி ஆகியோர் கலந்து கொண்டனர்…

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

தற்போதைய செய்திகள்