மலைக்கோட்டை மாநகர இருசக்கர வாகன பழுது நீக்குவோர் தொழிற்சங்க திருச்சி மாவட்டம் சார்பில் ஆண்டு விழா திருச்சி பொன்மலைப்பட்டி ரோடு ஸ்ரீராம் மஹாலில் இன்று நடைபெற்றது.

இதில் மாவட்ட பொருளாளர் செல்வமணி வரவேற்புரை ஆற்றிட, இருசக்கர வாகன பழுது நீக்குவோர் தொழில் சங்கத்தின் மாவட்ட தலைவர் சக்திவேல் தலைமை தாங்கினார்‌. மாவட்ட இணை செயலாளர் செல்வம் மாவட்ட துணை செயலாளர் பாலசுப்பிரமணி மாவட்ட செய்தி தொடர்பாளர் சையத் தெரியாத ஆகியோர் முன்னிலை வகித்தனர் சிறப்பு அழைப்பாளராக கௌரவ தலைவர் லட்சுமணன் கலந்துகொண்டு சிறப்புரையாற்றினார்.

இந்த ஆண்டு விழா கூட்டத்தில் எடுக்கப்பட்ட முக்கிய தீர்மானங்களாக :- தமிழக அரசு இருசக்கர வாகன பழுது நீக்குவோர் தொழிற்சங்கத் தொழிலாளிகளுக்கு தனி நல வாரியம் அமைக்க கோரியும், மெக்கானிக் தொழிலாளர்களின் வாழ்வாதாரத்தின் முன்னேற்றத்திற்காக வழங்கக் கூறுவது உள்ளிட்ட தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டது‌. கூட்டத்தில் இருசக்கர வாகன பழுது நீக்குவோர் தொழிலாளர் சங்கத்தின் நிர்வாகிகள் உறுப்பினர் உள்ளிட்ட ஏராளமானோர் கலந்து கொண்டனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

தற்போதைய செய்திகள்